ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா நடித்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலை கோலிவுட்டில் நிலவியுள்ளது. அதனால்தான் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுத்து நயன்தாரா கேட்கிற சம்பளத்தை கொடுத்து கமிட் பண்ண நினைக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது காஷ்மோராவைத் தொடர்ந்து டோரா, இமைக்கா நொடிகள், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் படம், மீஞ்சூர் கோபி இயக்கும் படம் என பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ஆனால், காஷ்மோராவில் அவர் மெயின் ரோலில் நடிக்கவில்லை. அதேபோல் இமைக்கா நொடிகளிலும் ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறார்.
ஆனால் நயன்தாரா இப்படி கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை செலக்ட் பண்ணுவதைப்பார்த்து அவரது அபிமானிகள் அட்வைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, லீடு ரோலில் நடிக்கும் படங்க ளெல்லாம் ஹிட்டடித்து வரும்போது, எதற்காக இப்படி சிறிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிறார்களாம். அதோடு, ஒருவேளை இந்த படங்கள் தோல்வியடைந்தால், இதுவரை நயன்தாரா நடித்தால் அந்த படம் வெற்றி பெறும் எ ன்று நிலவிவரும் செண்டிமென்ட் உடைந்து விடும் என்றும் அவருக்கு மானசீக அறிவுரை கொடுக்கிறார்களாம். அதையடுத்து, இந்த விசயத்தில் சற்றே யோசிக்கத் தொடங்கியிருக்கிறாராம் நயன்தாரா.