ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் கத்தி, தெறி, சூர்யாவுடன் 24, விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள, தனுசுடன் தங்கமகன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த சமந்தா, மீண்டும் தனுசுடன் வடசென்னை படத்தில் நாயகியாக கமிட்டாகியிருந்தவர், நாக சைதன்யாவுடனான திருமண செய்திகள் வெளியானதை அடுத்து வடசென்னையில் இருந்து விலகினார். அதனால் அப்படத்தில் சமந்தா நடிக்கயிருந்த வேடத்திற்கு அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, சமந்தா நடித்த ஜனதா கேரேஜ் படம் வெளியாகி ஹிட்டடித்தது. அதனால் ஜனதா கேரேஜ்தான் சமந்தாவின் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிக்கும் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் புதிய படமொன்றிலும் மீண்டும் கமிட்டாகியிருக்கிறார் சமந்தா.
மேலும், தற்போது மீடியா பேட்டிகளிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இனிமேல் நான் எந்த படத்தையும் முதல்நாள் தியேட்டருக்கு சென்று பார்க்க மாட்டேன் என்று திடீரென அறிவித்துள்ளார். எதற்காக இந்த முடிவு? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, நான் நடித்த தெறி, ஜனதா கேரேஜ் ஆகிய படங்கள் வெளியான முதல்நாளே தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது என்னுடன் படம் பார்த்தவர்கள் படம் சரியில்லை, ஓடாது என்றார்கள். அதனால் நான் மனசுடைந்து விட்டேன்.
ஆனால் அப்படி அவர்கள் சொன்ன அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. அதன்காரணமாக இனிமேல் தான் நடிக்கிற படங்களை முதல்நாள் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்துள்ள சமந்தா, மற்றவர்களின் கருத்துக்களை நம்பக்கூடாது என்றும் முடிவெடுத்துள்ளாராம்.