ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி சென்னை, குடும்பநல கோர்ட்டில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்திருக்கிறார். 1993-ம் ஆண்டு உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்த ரம்பா, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இன்னும் சில மொழிகளிலும் அங்குள்ள முன்னணி ஸ்டார் நடிகர்களுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
2010-ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரம்பா, அவ்வப்போது சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். ரம்பாவிற்கு 2011-ம் ஆண்டு லாண்யா என்ற பெண் குழந்தையும், 2015-ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
கணவர் இந்திரன் உடன் 6 ஆண்டுகாலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரம்பாவின் இல்லற வாழ்வில் இப்போது புயல் வீச துவங்கியுள்ளது. ஆம், இந்திரன்-ரம்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் இனியும் என்னால் என் கணவரை விட்டு பிரிந்து வாழ முடியாது, அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை டிச.,3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.