ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இலியானா, பட வாய்பிற்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இதைப்பற்றி இலியானா மேலும் கூறியதாவது...."பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி கொண்டால் அதை நம்மை உயர்த்தும், இல்லையென்றால் மொத்தமாக பாலிவுட் சினிமாவை விட்டே துரத்தி விடும். பட வாய்ப்பே இல்லை என்றாலும் கூட யாரிடமும் போய் வாய்ப்பிற்காக கையேந்தி (பிச்சை) நிற்க மாட்டேன் " என்றார்.
இலியானா, தற்போது ‛பாத்சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.