ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகி சில தினங்கள் நடித்தார் சிம்பு. ஆனால் எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் கிடைத்ததால் அந்த படத்தை இயக்க சென்று விட்டார் கெளதம்மேனன். சிம்புவும் அதற்கு விட்டுக்கொடுத்து, அந்த இடைவெளியில் வாலு படத்தில் நடித்து வந்தார். பின்னர் என்னை அறிந்தால் ரிலீசான பிறகு மீண்டும் அச்சம் என்பது மடமையடா படம் தொடங்கப்பட்டது.
அதையடுத்து வேகமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், கடைசியாக ஒரு பாடலை மட்டும் படமாக்க வேண்டியிருந்தபோது, கெளதம்மேனன்- சிம்புவுக்கிடையே சம்பள பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் பின்னர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா படவேலைகளில் இறங்கினார் கெளதம். இந்நிலையில் சில மாதங்களுக்குப்பிறகு சிம்புவுடனான கருத்து வேறுபாடு நீக்கப்பட்டு கடைசி பாடலிலும் அவர் நடித்துக்கொடுத்து விட்டார். அதனால் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது அச்சம் என்பது மடமையடா.
மேலும், ஏற்கனவே அப்படத்தின் முதல் டரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான தள்ளிப்போகாதே -என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று அப்படத்தின் 2வது டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதையும் சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் பெரிய அளவில் டிரென்ட் செய்து வருகின்றனர்.