ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜமௌலி அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றார். பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் பாகுபலி-2 படத்திலும் நடிக்கின்றனர். பாகுபலி-2 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், அக்டோபர் 22 ஆம் தேதி மும்பையில் நடந்த, திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.
இதில் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலி, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் பாகுபலி படத்தில் வில்லன் வேடத்தில் மிரட்டிய நடிகர் ராணா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இவ்விழாவிற்கு வரமுடியாததன் காரணத்தை டுவிட்டரில், தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள சிறிய நகரத்தில் நடைபெற்று வரும் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் ராணா, அங்கிருந்து விமான நிலையத்திற்கு செல்ல மூன்று மணிநேரம் ஆகும் என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை என ராணா விளக்கம் அளித்துள்ளார்.