மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிரம்மாண்ட வெற்றியை பெற்ற, பாகுபலி திரைப்படத்தை, ரசிகர்கள் ஏற்றதால், இரண்டாவது பாகத்தை தயாரிப்பது எளிதாக இருந்தது, என, இயக்குனர், எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற, பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி, பாகுபலி - 2 படத்தின், பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
இதன்பின், அவர் பேசியதாவது: ஒரு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றால், அதன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது எளிது; மக்களுக்கு ஏற்கனவே, திரைப்படத்தின் கதாபாத்திரங்களும், அடிப்படைக் கதையும் புரிந்திருப்பதால், அதன் வெற்றியும் உறுதியாகும்.
இருப்பினும், அதிரடி சண்டைக் காட்சிகளை படமாக்குவது, சவாலான விஷயமாக உள்ளது. பாகுபலி படத்தில், கட்டப்பா வேடம், பெரியளவில் புகழ் பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு, ஏப்ரலில் திரைக்கு வருகிறது.
இவ்வாறு ராஜமவுலி கூறினார்.