ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
2011ம் ஆண்டு தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஆரண்ய காண்டம் படத்தை இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. வட சென்னையில் கோழிச் சண்டையை வைத்து நடக்கும் அண்டர்கிரவுண்ட் சூதாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த படம். ஜாக்கி ஷெராப், ரவிகிருஷ்ணா, யாஷ்மின் பொப்பண்ணா, சம்பத்ராஜ், குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்திருந்தனர். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தியாகராஜன் குமாரராஜாவும் மற்றும் சிறந்த எடிட்டருக்கான விருதை கே.எல்.பிரவீன் மற்றும் என்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோரும் பெற்றனர்.
இந்தப் படத்திற்கு பிறகு பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு படம் இயக்க கேட்டு தியாகராஜன் குமாரராஜாவை கேட்டது. ஆனால் அவர் இயக்கவில்லை. "எனக்கு அடுத்த கதை தோன்ற வேண்டும், அதை நான் திரைவடிவமாக மாற்ற வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த படம் இயக்குவேன்" என்றார். அப்படி அவர் கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இப்போது மீண்டும் படம் இயக்கத் தயாராகிவிட்டார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு நிகரான கேரக்டரில் மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்கிறார். எதிரும் புதிருமான இரு இளைஞர்களின் வாழ்க்கை கதை. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. முறைப்படியான அறிவிப்பு தீபாவளிக்கு பிறகு வெளியிடப்பட இருக்கிறது.