ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் நடிக்கும்போது அவர்களுக்குள் ஈகோ வருவது இன்று, நேற்றல்ல முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. 1962ம் வருடம் வெளிவந்த படம் பார்த்தால் பசி தீரும். இதில் சிவாஜி, ஜெமினி, சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, கே.ஏ.தங்கவேலு, கமலஹாசன் (குழந்தை நட்சத்திரம்) உள்ளட ஏராளமானோர் நடித்திருந்தார்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்தப் படம் முடிந்ததும் சாவித்ரி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி இவர்களில் யார் பெயரை டைட்டில் கார்டில் முதலில் போடுவது என்ற பிரச்சினை வந்தது. "நான்தான் இப்போது மார்க்கெட்டில் நம்பர் ஒண் இடத்தில் இருக்கிறேன் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சரோஜாதேவி. "நான்தான் சீனியர் என்பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்றார் சாவித்ரி, "எல்லோருக்கும் சீனியர் நான். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவள் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் சவுகார் ஜானகி. எல்லோரிடமும் சரி சரி என்ற தலையாட்டிவிட்டார் பீம்சிங்.