அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைய வசூல் நாயகர்களில் ஒருவராக ஜி.வி.பிரகாஷ்குமார் இருந்து வருகிறார். நவம்பர் மாதத்தில் மட்டும் ஜி.வி.பிரகாஷ் நடித்து 'புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்குப் பிறகு தற்போது 'அடங்காதே, 4ஜி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலுவை முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க கடந்த சில நாட்களாகவே படக்குழுவினர் கடும் முயற்சியில் இறங்கினார்.
வடிவேலுவும் தற்போது அதற்கு சம்மதித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரே வடிவேலுவை நேரடியாக சந்தித்து தன்னுடன் நடிக்கக் கேட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கத்திச் சண்டை' படத்தின் மூலம் மீண்டும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்துள்ள வடிவேலு, இப்போது ஜி.வி.பிரகாஷுடனும் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்திற்காக வடிவேலுவுக்கு பெரிய தொகை ஒன்றை சம்பளமாகக் பேசியுள்ளார்களாம். இப்படத்திற்கான மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது. தீபாவளிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.