அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தனுஷ் நடித்த மாரி படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடைந்த அளவுக்கு, அவரது நடிப்பில் அடுத்து வெளிவந்த தங்கமகன், தொடரி படங்கள் வெற்றியடையவில்லை. விமர்சன ரீதியாக தனுஷின் அந்த இரு படங்கள் சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், கொடி படத்தின் மூலம் தனது மார்க்கெட் மீண்டும் உச்சத்தைத் தொடும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறார் தனுஷ். அதனால்தான் எத்தனை படங்கள் வெளிவந்தாலும் கொடி படத்தை இந்த தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வேண்டும் என்று தயாரிப்பாளர் எஸ்கேப் மதனிடம் நம்பிக்கையுடன் சொன்னாராம் தனுஷ்.
சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கொடி படத்தில் தனுஷுக்கு இரட்டை வேடம். முதல்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் கொடி படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவெ வெளியாகி ஹிட்டாகி உள்ளன.
இதனிடையே கொடி படத்தை நேற்று தணிக்கைக்கு அனுப்பினார்கள். படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க தகுதியான படம் என்று அதாவது யு சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள கொடி படம் தமிழகத்தில் மட்டும் 450க்கும் அதிகமான திரையரங்குகளில் ரீலீஸாகிறது.