ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவின் ஒஸ்தி பட விழாவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வந்தால், விழா அரங்குக்குள் புகுந்து போராட்டம் நடத்துவோம் என்று நடிகர் சிம்புவுக்கு இந்து மக்கள் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சிம்பு ஒஸ்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக் ஆகும். தரணி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு இந்தி நடிகர் சல்மான்கானை அழைக்கப் போவதாக சிம்பு கூறியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி சல்மான்கான் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை. திரையுலகத்தினரின் தடையையும் மீறி இலங்கையில் சல்மான்கான் படப்பிடிப்புக்கும் சென்று வந்தார். எனவே சிம்பு, ஒஸ்தி பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சல்மான்கானை அழைக்க கூடாது. மீறி அவர் வந்தால் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம். விழா அரங்குக்குள் நுழைந்து போராட்டமும் நடத்துவோம், என்று கூறப்பட்டுள்ளது.