Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாக்., நடிகர் படத்திற்கு பாதுகாப்பு - மத்திய அமைச்சர் உறுதி

21 அக், 2016 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Central-Minister-sure-to-give-protection-for-Pak-actors-movie

பாக்., நடிகர் பவாத் கான் நடித்துள்ள, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படத்தை வெளியிட, முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளதாக, படத்தயாரிப்பாளர் முகேஷ் பட் தெரிவித்துள்ளார்.


பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர், நடிகையர் அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய், பாக்., நடிகர் பவாத் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், ஏ தில் ஹை முஷ்கில். கடந்த மாதம், பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் யூரியில் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள், 19 பேர் பலியாகினர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பாக்., நட்சத்திரங்களை, இந்திய திரைப்படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குரல் எழுப்பினார். பாக்., நடிகர்கள் நடித்த, திரைப்படங்களை திரையிடவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பாக்., நடிகர் பவாத் கான் நடித்துள்ள, ஏ தில் ஹை முஷ்கில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த படத்தை திரையிடும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என, தாக்கரே எச்சரித்துள்ளார். இதனால், பல தியேட்டர் உரிமையாளர்கள், இந்த படத்தை திரையிட மறுத்து விட்டனர். இந்நிலையில், படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான முகேஷ் பட், நேற்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.


இதன்பின், அவர் கூறியதாவது: எங்கள் நிலை குறித்து உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன். அனைத்து மாநில அரசுகளுடனும் பேசுவதாக, அவர் உறுதியளித்துள்ளார். ஏ தில் ஹை முஷ்கில் படத்தை, திரையிடும் அனைத்து தியேட்டர்களுக்கும், 100 சதவீத போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in