ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் ஹாலிவுட், கொரியன், ஜப்பான், ஆப்பிரிக்கப் படங்களிலிருந்து கதைகளைத் திருடி படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். முன்பெல்லாம் இந்தக் கதைத் திருட்டு பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதில்லை. இணையதள செயல்பாட்டு வளர்ச்சியினால் ஒரு படம் பற்றிய அனைத்து விவரங்களும் துல்லியமாக அனைவருக்கும் போய் சேர்கின்றன.
தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய பல்வேறு தகவல்களும் இணையங்களில் விரவிக் கிடக்கின்றன. இதனால் எந்தப் படத்தின் கதை எதிலிருந்து திருடப்பட்டது, எந்தப் பாடல் எந்த ஆல்பத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது வரை சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக 'போகன்' படத்தின் கதைத் திருட்டு பற்றித்தான் கோலிவுட்டில் பரபரப்பு நிலவி வருகிறது. கடைசியில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் நேற்று ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் அவர்களே 'போகன்' படத்தின் கதை ஆப்பிரிக்கப் படம் ஒன்றின் தழுவல் என்றும் சில காட்சிகள் ஆங்கிலப் படங்களில் இருந்து தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தத் திருட்டை 'போகன்' படத்தின் இயக்குனர் லட்சுமண் ஒத்துக் கொண்டதுதான் இந்த விவகாரத்தின் ஹைலைட். அதே சமயம் இந்தத் திருட்டுக் கதைக்கு தன்னுடைய கதை இது என்று சொந்தம் கொண்டாடிய ஆன்டனி தாமஸ், 75 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டது அதைவிட ஹைலைட்.
தமிழ் சினிமாவில் பல கதைகள் இப்படி திருடப்பட்டு படம் எடுக்கப்படுகின்றன என்ற செய்தி வந்த போதெல்லாம் அந்த செய்தியை எழுதியவர்களைக் கோபத்துடன் பார்த்த சம்பந்தப்பட்டவர்கள், இப்போது 'போகன்' படத்தின் கதை திருட்டுக் கதை என்பதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு கதையில் நடிக்க ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா எப்படி சம்மதித்தார்கள்.