ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெங்களூரில் கண்டக்டராக வேலைபார்த்து இன்று தமிழ்சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக கோலோச்சும் ரஜினியின் சாதனை வரலாற்றை அனைவரும் அறிவர்.. ஆனால் இதே ரஜினி, நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபின், நமக்கெல்லாம் எங்கேப்பா நடிக்க சான்ஸ் கிடைக்கப்போகிறது என ஒருகட்டத்தில் மனம் வெறுத்து ஊருக்கு கிளம்பிய கதையும் அதை மலையாள நடிகர் ஒருவர் தடுத்து நிறுத்திய கதையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்பிவந்து திரைப்பட கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாரே தவிர, அங்கே நடிப்பு பயிற்சிக்காக பைனாப்பிள். எலுமிச்சை கலர்களில் வந்திருந்த இளைஞர்களையும் தன்னையும் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு, நமக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கப்போகிறது. பேசாமல் ஊருக்கு கிளம்பிவிடலாம் என்றுதான் முடிவெடுத்தாராம். ஆனால் அவருடன் படித்த இரண்டு மலையாள நண்பர்கள், மலையாள சினிமாவில் கருப்பு உருவம் கொண்ட சத்யன் சூப்பர் ஹீரோவாக ஆட்சி செய்த வரலாறை கூறி அவரை தைரியப்படுத்தினார்களாம்.. தொடர்ந்து சத்யன் படங்களை பார்க்க ஆரம்பித்த ரஜினிக்கு பின்னர்தான் புதிய உத்வேகம் பிறந்ததாம். ஆக, ரஜினி இன்று சூப்பர்ஸ்டாராக வலம் வர, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய மறைந்த மலையாள நடிகர் சத்யனும் ஒருவகையில் காரணம் என்பதை மறுக்க முடியுமோ..?