ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் அடுத்து நடிக்கும் படம் தாயம். பியூச்சர் பிலிம் பேக்டரி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார், கண்ணன் ரங்கசாமி இயக்கி உள்ளார். இந்தப் படம் சா மற்றும் எக்ஸாம் என்ற ஹாலிவுட் படங்களின் தழுவல் என்ற செய்திகள் வெளியானது. இதனை ஹீரோ சந்தோஷ் பிரதாப் மறுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதில் எந்த விதத்திலும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க ஒரு நேர்க்காணலை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் தாயம். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதைக்களத்தில் ஒரு தனித்துவமான சிறப்பம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தின் கதைக்களம் மாறி கொண்டே இருக்கும். மர்மம், திகில், சஸ்பென்ஸ் என கதைக்களம் மாறி கொண்டே இருக்கும்.
இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமே முகமூடி மனிதன் தான். அந்த முகமூடி மனிதனுடன் தாயம் விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் நான் விளையாடுகிறேன். அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ப்ரோஸ்த்தெடிக் மாஸ்க் எனப்படும் முகமூடியை அமெரிக்காவில் இருந்து அதிக தொகை கொடுத்து இறக்குமதி செய்தனர் தயாரிப்பாளர்கள். இந்தப் படம் எனக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்று முழுமையாக நம்புகிறேன். என்கிறார் சந்தோஷ் பிரதாப்.