ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.ஓ. ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் சில வில்லன்கள் இருந்தபோதும் மெயின் வில்லனாக இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று பல மாதங்களாக பரிசீலனை செய்து வந்த ஷங்கர், கடைசியில் இந்தி நடிகர் அக்சய்குமாரிடம் பேசும்போது, ரஜினி படம் என்றதும், அவருடைய ரசிகன் நான். அதனால் அவர் படத்தில் வில்லனாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று உடனே ஓகே சொல்லி இப்போது ரஜினியுடன் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல 57வது படத்தில் நடிக்கும் முக்கிய வில்லன் யார் என்பது முடிவாகாத நிலையில், தற்போது, இன்னொரு பாலிவுட் ஹீரோவான அபிஷேக்பச்சனை நடிக்க வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறதாம். மேலும், ரஜினி படங்களில் 2.ஓ எப்படி மெகா பட்ஜெட்டில் தயாராகி வருகிறதோ அதேபோல் அஜித் படங்களில் அவரது 57வது படமும் மெகா பட்ஜெட்டில்தான் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதனால் இந்திய அளவில் படத்தை பிரமாண்டமாக வெளியிட வேண்டும் என்பதற்காக இந்திய அளவில் பிரபலமான அபிஷேக்பச்சனை நடிக்க வைக்கும் முயற்சி நடக்கிறதாம்.