மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அமுதேஷ்வர் இயக்கியுள்ள படம் மீன் குழம்பும் மண்பானையும். நவம்பர் 11-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஷ்னா சாவேரி, பூஜாகுமார், ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க கமல்ஹாசன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து இயக்குனர் அமுதேஷ்வர் கூறுகையில், காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை செட்டியாராக பிரபு நடித்துள்ளார். அவர் மலேசியாவில் ஓட்டல் நடத்துகிறார். இந்த படத்தில் கமல் சார் இடைவேளைக்கு முந்தின காட்சியிலும், க்ளைமாக்சிலும் வருகிறார். அந்த வகையில் அவர் இரண்டு காட்சிகளில் நடித்துள்ளார். அந்த இரண்டு காட்சிகளுமே மிகச்சிறப்பாக வந்துள்ளது.
பிரபுவின் மகனாக கார்த்தி என்ற வேடத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
முக்கியமாக, கதைப்படி பிரபு தமிழ் கல்ச்சர்படி வாழ்பவர், ஆனால் காளிதாஸோ மலேசியாவில் பிறந்தவர் என்பதால் அந்த ஊர் நாட்டு வழக்கப்படி வாழ்கிறார். அதனால் அப்பா- மகனுக்கிடையே கல்ச்சர்ரீதியாக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அந்த பிரச்சினைகளுக்கு எந்த மாதிரியான தீர்வு சொல்லப்படுகிறது என்பதுதான் இந்த மீன்குழம்பும் மண்பானையும். இப்படி உறவுகளுக்கிடையே நிகழும் பிரச்சினைகளை சொல்லும், இந்த படத்தில் ஊர்வசியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த படம் அனைத்துதரப்பு ரசிகர்களுக்குமான படமாக உருவாகியுள்ளது என்கிறார் அமுதேஷ்வர்.