ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், மலையாளம், இந்தி என தற்போது 10 படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சில படங்களில் சிங்கிள் நாயகி என்றபோதும், பல படங்களில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தான் நடிக்கிறார். அதோடு, அட்டக் கத்தி, காக்கா முட்டை, ரம்மி, தர்மதுரை படங்களைப்போன்று குடும்பப்பாங்கான வேடங்களாகத்தான் நடித்து வருகிறார். ஹோம்லியான வேடங்களே அவ ருக்கு வெற்றியை கொடுத்திருப்பதால் அவரை அந்த கோணத்திலேதான் டைரக்டர்களும் நடிக்க வைக்கின்றனர்.
ஆனால், சென்னை சிட்டியில் பிறந்து வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண். கலைஞர் டிவியில் இடம்பெற்ற மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் படுகவர்ச்சியாக உடையணிந்து நடனமாடியவர். அந்த வகை யில், சினிமாவிலும் கிளாமராக நடிக்க அவர் ரொம்ப ஆர்வமாகவே உள்ளார். ஆனால் தினேசுடன் நடித்த திருடன் போலீஸ் படத்தில்தான் மிதமான கிளாமராக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன்பிறகு நடித்ததெல்லாமே ஹோம்லியான வேடங்கள்தான்.
இந்த நிலையில், தற்போது மா.கா.பா.ஆனந்துடன் நடித்து வரும் கடலை படத்தில் இதுவரை நடிக்காத அளவுக்கு பாடல் காட்சிகளில் கிளாமராக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதுமட்டுமின்றி, நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான அவருக்கு, படத்துக்குப்படம் அதிரடி நடனமாட வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாம். அதனால் கடலை படத்திற்கு பிறகு தனக்கு தமன்னா நடிப்பது போன்ற கிளாமரான கதாநாயகி வேடங்களை வரவைக்க வேண்டும் என்கிற ரீதியில் கடலையில் கவர்ச்சி காட்டி அதிரடி நடனமாடிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.