விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இன்றைக்கு சினிமாவில் வட்டார மொழி என்பது சர்வசாதரணமான ஒன்று. திருநெல்வேலியில் கதை நடந்தால் கேரக்டர்கள் "அண்ணாச்சி, ஏலே..." என்று வட்டார மொழி பேசுவார்கள். மதுரை கதை களம் என்றால் "எங்ககிட்டேயேவா... கொண்டேபுடுவேன்..." என்று பேசுவார்கள். கோவை பகுதி கதை என்றால் "ஒன்ற பொண்ணு என்ற வீட்டு மருமகளாக்கும்" என்பார்கள், சென்னை படம் என்றால். "அப்படியே வுட்டேன் செவிளு பிகிளாகிடும்" என்றார்கள்.
ஆனால் அந்தக் காலத்தில் எந்த ஊர் கதை என்றாலும் ஒரே மாதிரிதான் பேசுவார்கள். முதன் முதலாக வட்டார வழக்கில் வெளிவந்த படம் மக்களை பெற்ற மகராசி. சிவாஜி கணேசன், பானுமதி, கண்ணாம்பா, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். கே.சோமு இயக்கி இருந்தார்.
இதில் நடித்த அனைவரும் கோவை பகுதி வட்டார மொழியான கொங்கு தமிழ் பேசி நடித்திருந்தார்கள். செந்தமிழ் வசனம் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் "ஏனுங்கோ வாங்கோ உட்காருங்கோ" என கொங்கு தமிழ் பேசினார். படத்தில் இடம்பெற்ற "மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறுபூட்டி வயக்காட்ட உழுதுபோடு செல்லக்கண்ணு..." என்று கொங்கு தமிழிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. 1957ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியது யார் தெரியுமா?, புராண படங்களில் அனல் தெறிக்கும் தூய தமிழ் வசனங்களை எழுதிய ஏ.பி.நாகராஜன் தான்.