ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாசக்கார நண்பர்கள், கீறிப்புள்ள, சாட்டை உள்பட பல படங்களில் நடித்தவர் யுவன். தற்போது 13ஆம் நூற்றாண்டு கதையில் உருவாகியுள்ள இளமி மற்றும் அய்யனார் வீதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வருகிறது. இதையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார் யுவன். இந்த படத்தில் யுவன் நடிப்பதை கடந்த மாதத்தில் உறுதி செய்தார் டைரக்டர் பாலா.
இதுபற்றி யுவன் கூறுகையில், பாலா சார் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நிஜமாலுமே என்னால் நம்பவே முடியவில்லை. அவர் படத்திளெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை. ஆனால் நானே எதிர்பார்க்காத வகையில், அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதே சமயம் நான் பாலா சார் படத்தில் நடிக்கிறேன் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். மற்றபடி அந்த படத்தின் கதை, நான் நடிக்கப்போகும் வேடம், அந்த படம் எப்போது தொடங்குகிறது என்பது பற்றிய எந்த விவரமும் எனக்கு தெரியாது. பாலா சார் எப்போது அழைக்கிறாரோ அப்போது போய் நடிப்பேன்.
மேலும், பாலா சார் இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது, சூர்யா நடித்த நந்தா, ஆர்யா நடித்த நான் கடவுள், அதர்வா நடித்த பரதேசி போன்ற படங்கள் அவர்களுக்கு திருப்புமுனை படங்களாக அமைந்தது போனறு நான் நடிக்கப் போகும் இந்த படமும் எனது கேரியரில் திருப்புமுனையாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் பாலா சார் படத்தில் நடித்து முடிக்கிற வரை நான் வேறு எந்த படத்திலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் யுவன்.