ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'ரெமோ' படம் வெற்றி பெற்றதற்காக நன்றி விழாவாக நடைபெற வேண்டிய விழா, கடைசியில் சிவகார்த்திகேயன் கண்ணீர் வடித்த விழாவாக மாறிப் போனது. டிவியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவராக ஆரம்பமான அவரது கலையுலக வாழ்க்கை இன்று பிரபல வினியோகஸ்தர் ஒருவரே எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய் வரிசையில் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு உயர்ந்துள்ளது. அந்த உயரமும் வளர்ச்சியும் சாதாரணமானது அல்ல. எந்த விதமான சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்தத் திறமையால் மட்டுமே சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு ஒரு வசூல் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.
ஆனால், நேற்று நடந்த 'ரெமோ' நன்றி விழாவில் ““நாங்க யார்கிட்டயும் எதுவுமே கேக்கலை, உதவி எதுவுமே செய்ய வேணாம். உதவியோ ஆதரவோ கொடுக்கிறதுக்கு மீடியா இருக்காங்க, மக்கள் இருக்காங்க. ஆனா, வேலை செய்யறத தயவு செஞ்சி தடுக்காதீங்க. அதை எல்லாருக்கும் நான் வேண்டுகோளா வச்சிக்கிறேன்”, என கண்ணீர் மல்க கூறி அமைதியாக நின்றனார்.
அது மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் தொடர் வெற்றி குறித்தும், “யார்கிட்ட இருந்தோ இந்த ஹிட்டைத் திருடிட்டு வர்ற மாதிரியே நினைக்கிறாங்க, அப்படி கிடையவே கிடையாது. ரொம்ப போராடி, போராடித்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆறு மாசம் நான் சும்மா உட்கார்ந்திருக்கேன். அந்த நேரத்துல இரண்டு படம் பண்ணியிருக்கலாம், ஆனால் அப்படி பண்ண விருப்பமில்லை,” எனக் கூறினார்.
'ரெமோ' படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள், படக்குழுவினர், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சிவகார்த்திகேயன் இப்படி கண்ணீர் மல்க கூறியது அவரைப் பார்த்து யார் பொறாமைப்படுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அந்தப் பொறாமையால்தான் அவரைத் தொடர்ந்து படங்களில் நடிக்க விடுவதை சிலர் திட்டம் போட்டு ஏதோ செய்கிறார்களோ என கேட்க வைக்கிறது.
தன்னை அப்படி வேலை செய்ய விடாமல் தடுப்பவர்கள் யார் என்பதை மேடையில் சிவகார்த்திகேயனும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், திரையுலகத்தைச் சேர்ந்த சிலர்தான் அப்படிப்பட்ட வேலைகளில் இறங்கியுள்ளார்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தங்களது படங்களில் நடிக்க வேண்டும் என சிலர் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள் என்கிறார்கள். தனி ஆளாக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக செயல்படுபவர்கள் விஜய்க்கோ, அஜித்துக்கோ இப்படி நெருக்குதல் கொடுக்க முடியுமா என்றும் கேட்கிறார்கள்.