வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
உலக அழகி ஐஸ்வர்யராய், சமீபத்திய படங்களில் ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் பிரிந்து விட இருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது. அதோடு மாமியார் ஜெயாபச்சனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் குடும்பத்தில் பிளவு என்றும் செய்திகள் வெளிவந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போன்று நேற்று அவர் குடும்பத்துடன் துர்கா பூஜையில் கலந்து கொண்டார்.
மும்பை ராமகிருஷ்ணா மிஷன் மருத்துவமனையில் நடந்த துர்காபூஜையில் அமிதாப், அவரது மனைவி ஜெயாபச்சன் மகள் ஸ்வேதாவுடன் கலந்து கொண்டார். இவர்களுடன் ஐஸ்வர்யாராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மகளுடன் கலந்து கொண்டனர். அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து பூஜையில் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், குழந்தை மூவரும் வெள்ளை உடையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.