சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தினமலர் மற்றும் பூர்விகா மொபைல்ஸ் இணைந்து நடத்திய, குக் அண்ட் கிளிக் சுண்டல் போட்டி, ராயப்பேட்டையில் நடந்தது. நாளிதழில் போட்டி அறிவிப்பு வெளியானதும், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர். காலை, 7:00 மணி முதலே, 250க்கும் மேற்பட்டோர், போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமுடன் குவிந்தனர். முதல் போட்டியில், ஐந்து ஆண்கள் உட்பட, 82 பேர் கலந்து கொண்டனர். இவர்கள், சுண்டல்களில் புதுவிதமான, காய்கறி, பன்னீர், கொள்ளு, இனிப்பு, காரா ஜாமூன், அறுசுவை சுண்டல் உள்ளிட்ட, 90 வகை சுண்டலை தயாரித்தனர். இதிலிருந்து சிறந்த, 15 சுண்டல் வகைகளை, செப் தாமு தேர்ந்தெடுத்தார்.
இந்த போட்டியில், பாரதி, ராமச்சந்திரன், நாராயணி, சதாலட்சுமி, முரளி உள்ளிட்டோர், முதல் ஐந்து இடங்களை பெற்றனர். இவர்களுக்கு, தலா 5,000 ரூபாயும், விடியம் கியாஸ் ஸ்டவ் மற்றும் குக்கர் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியின் இடை இடையே, வினாடி - வினா போட்டியும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரம்பா கூறும்போது... திருமணம், திருவிழா, பிறப்பு, இறப்பு என, அனைத்து நிகழ்ச்சிகளிலும், உணவே முதல் இடம் பெறுகிறது. என் அப்பா இனிப்பு வியாபாரம் செய்து வந்தார். அதனால், எனக்கும், சமையலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான், பல்வேறு இடங்களில் சுண்டல் சாப்பிட்டுள்ளேன். ஆனால், கோவில் சுண்டல் மாதிரி சுவையாக இருந்ததில்லை. கோவில் என்றாலே, சுண்டல் தான் ஞாபகத்துக்கு வரும். இந்திய பெண்களுக்கு எப்போதும் சமையல் மீது ஆர்வம் அதிகம். டிவி, புத்தகம், இன்டர்நெட் மூலம், பெண்கள் சமையலை கற்றுக் கொண்டே இருக்கின்றனர் என்றார்.