ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாட்டில் பிறந்தாலும் மலையாள நடிகையாக புகழ்பெற்றவர் பத்மப்பரியா, தமிழில் தவமாய் தவமிருந்து, மிருகம், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், தங்க மீன்கள் உள்பட பல படங்களில் நடித்தார். அமெரிக்காவில் படித்தபோது உடன் படித்த ஜாஸ்மின் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தியான் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஷோபனா, மஞ்சுவாரியார் போன்று நடன நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நடனத்தை முறைப்படி கற்று ஆடி வந்தேன். நடனம் என் உயிராக இருந்தது. ஆனால் நடிப்பு, படிப்பு என்ற வந்த பிறகு நடனத்தின் பக்கம் மீண்டும் திரும்ப முடியவில்லை. சமீபத்தில் எனக்கு நடனம் கற்றுக் கொடுத்த குருவை சந்தித்தேன், அவர் நான் நடனத்தை கைவிட்டது குறித்து மிகவும் கவலைப்பட்டார். மீண்டும் நடனத்தை ஆடுமாறு சொன்னார். அது என்னை மிகவும் பாதித்தது, அதனால் மீண்டும் நடனமாட முடிவு செய்திருக்கிறேன். அமெரிக்காவில் பிராட்வே பகுதியில் தினமும் நாடகமும், நடனமும் நடக்கும், அப்படியான நடன நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிரு'கிறேன். இதற்காக வெவ்வேறு அம்சங்கள் கொண்ட எல்லோரையும் கவரக்கூடிய வகையிலான நடனங்களை வடிவமைத்திருக்கிறேன். என்றார் பத்மப்ரியா.