‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் | வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? |
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது விடுதலைபுகளில் வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைகே.கணேசன் என்பவர் இயக்கினார். இதனை ஏ.சி.குருநாத் என்பவர் தயாரித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்தில் வன்முறை காட்சிகள், பாலியல் பலாத்கார காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி படத்திற்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதை எதிர்து மறு தணிக்கைக்கு தயாரிப்பாளர் சென்றார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தணிக்கை குழுவின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இசைப்பிரியாவின் சதோரி தர்மினி, தாயர் டி.வேதரஞ்சினி ஆகியோர், இசைப்பிரியாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. இசைப்பிரியாவின் வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். மேலும் நாங்கள் வெளிநாட்டில் அகதிகளாக வாழ்கிறோம். படம் வெளிவந்தால் எங்களுக்கு சிக்கல் வரும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழுவின் சான்றிதழ் மறுக்கும் அளவிற்கு படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்டவரின் தாயும், சகோதரியும் படத்துக்கு தடை கேட்டு கொடுத்துள்ள மனுவையும் நீதிமன்றம் ஏற்கிறது. எனவே படத்தை பொதுமக்களுக்கு தடையிட்டு காட்ட இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது. என்று தீர்ப்பளித்தது.