ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' ஜூன் 27ல் ரிலீஸ் | ரஜினி, கமலை இணைத்து படம் : முயற்சித்த லோகேஷ் | சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் |
இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது விடுதலைபுகளில் வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைகே.கணேசன் என்பவர் இயக்கினார். இதனை ஏ.சி.குருநாத் என்பவர் தயாரித்தார்.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்தில் வன்முறை காட்சிகள், பாலியல் பலாத்கார காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி படத்திற்கு சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதை எதிர்து மறு தணிக்கைக்கு தயாரிப்பாளர் சென்றார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. தணிக்கை குழுவின் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இசைப்பிரியாவின் சதோரி தர்மினி, தாயர் டி.வேதரஞ்சினி ஆகியோர், இசைப்பிரியாவின் வாழ்க்கை கதையை படமாக எடுக்க யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. இசைப்பிரியாவின் வாழ்க்கையை படத்தில் தவறாக சித்தரித்துள்ளனர். மேலும் நாங்கள் வெளிநாட்டில் அகதிகளாக வாழ்கிறோம். படம் வெளிவந்தால் எங்களுக்கு சிக்கல் வரும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை குழுவின் சான்றிதழ் மறுக்கும் அளவிற்கு படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்டவரின் தாயும், சகோதரியும் படத்துக்கு தடை கேட்டு கொடுத்துள்ள மனுவையும் நீதிமன்றம் ஏற்கிறது. எனவே படத்தை பொதுமக்களுக்கு தடையிட்டு காட்ட இந்த நீதிமன்றம் தடை விதிக்கிறது. என்று தீர்ப்பளித்தது.