ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
யூரி தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. வர்த்தகம் தொடங்கி இந்திய சினிமா உலகம் வரை பிரதிபலிக்கிறது. பாகிஸ்தான் நடிகர்கள், கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலிவுட் உலகும் பிளவுப்பட்டுள்ளது. அதிலும் சல்மான்கான், பாகிஸ்தான் நடிகர்கள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலைஞர்கள் என்று ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல்வாதிகளும், நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், பாலிவுட்டின் மற்றொரு பிரபலமான நானா பட்டேக்கரும் சல்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது... ‛‛நாடு தான் முதலில் முக்கியம். நாட்டிற்கு முன்னால் நடிகர்கள் எல்லாம் சிறியவர்கள் தான், அதிலும் பாகிஸ்தான் நடிகர்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். என்னை பொறுத்தவரை நாடு முதலில் முக்கியம், அதைவிட வேறு எதுவும் முக்கியம் கிடையாது. நான், இரண்டரை ஆண்டுகள் ராணுவத்தில் இருந்தவன், எனக்கு தெரியும் ராணுவ வீரர்கள் எவ்வளவு பெரிய ஹீரோக்கள் என்று, அவர்களுக்கு முன்னர் வேறு யாரும் ஹீரோக்களே கிடையாது. நான் அந்த ஹீரோக்களுக்கு மட்டும் தான் பேசுவேன், ஆனால் அவர்கள் எல்லாம்(சல்மான்) இதுபோன்ற விஷயங்களை பேச மாட்டார்கள் என்று கூறியுள்ளார் நானா.