ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1982ம் ஆண்டு வெளிவந்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த விசு, எஸ்.வி.சேகர், சூரியகோஸ் ஆகியோர் அதே கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர அஸ்வின் சேகர், பூர்ணா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, ஷாம்ஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தரண் இசை அமைத்துள்ளார், யாருடா மகேஷ் படத்தை இயக்கிய மதன்குமார் இயக்கி உள்ளார்.
இந்தப் படம் சமீபத்தில் தணிக்கை குழுவிற்கு சென்றது. எஸ்.வி.சேகரும் தணிக்கை குழு உறுப்பினர்தான் என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் அவர் படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் சில இடங்களில் ஆபாச வசனம் இருக்கிறது. இளைஞர்கள் மனதை கெடுக்கும் சில காட்சிகள் இருக்கிறது அதனால் யுஏ தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்கு எஸ்.வி.சேகர் எந்தெந்த காட்சிகள் என்று கேட்டிருக்கிறார். அவர்கள் காட்சிகளை சொல்ல சொல்ல இதேபோன்று அந்தப் படத்தில் ஒரு காட்சி இருந்ததே அதை எப்படி அனுமதித்து யு சான்றிதழ் கொடுத்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். சில வன்முறை காட்சிகளை கூறியிருக்கிறார்கள். கபாலி படத்தில் இல்லாத வன்முறையா என் படத்தில் இருக்கிறது அதற்கு எப்படி யு கொடுத்தீர்கள். என்று கேட்டிருக்கிறார்.
"என் படத்திற்கு யுஏ கொடுத்தால் நான் ரிவைசிங் கமிட்டிக்கு போக மாட்டேன். நேராக சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போவேன். இதுவரை நீங்கள் யூ கொடுத்த படத்தை அவர்களுக்கு பட்டியல் போடுவேன்" என்றிருக்கிறார். இதனால் பிரச்சினையை வளர்க்க விரும்பாத தணிக்கை குழுவினர் படத்துக்கு எந்த கட்டும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்துவிட்டனர்.