ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் இயக்குனர் ப.நீலகண்டனுக்கு இன்று 100வது பிறந்த நாள். அவரைப் பற்றி சில நினைவுகள்...
விழுப்புரத்தில் 1916ம் ஆண்டு அக்டோபர் 2ந் தேதி பிறந்தார். கலைமீது ஆர்வம் கொண்ட நீலகண்டன் நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதினார் அவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் படமாக தயாரித்தார். வேதாள உலகம் படத்திற்கு வசனம் எழுதினார். அண்ணாதுரையின் ஓர் இரவு படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.
1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த சக்ரவர்த்தி திருமகள் படத்தை இயக்கினார். தொடர்ந்து நீதிக்கு தலைவணங்கு, நேற்று இன்று நாளை, ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, குமரிகோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், என் அண்ணன், மாட்டுக்கார வேலன், கணவன், காவல்காரன், கொடுத்து வைத்தவள், திருடாதே, படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருடன் இணை இயக்குனராக பணியாற்றினார். எம்.ஜி.ஆரை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் நீலகண்டனுக்கு பெரும் பங்கு உண்டு. கடைசிவரை எம்.ஜி.ஆருடன் நட்பாக இருந்த நீலகண்டன், அவரிடம் எந்த உதவியையும் கேட்டு பெற்றதில்லை.
புகழ்பெற்ற பூம்புகார் படத்தை இயக்கினார். 1991ம் ஆண்டு வெளிவந்த தெய்வ திருமணங்கள்தான் இவர் இயக்கிய கடைசி படம். இதில் மீணாட்சி கல்யாணம் பகுதியை நீலகண்டன் இயக்கினார். எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனராக இருந்தாலும் சிவாஜி நடித்த முதல் தேதி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படங்களையும் இயக்கினார். 1992ம் ஆண்டு செப்டம்ர் 3ந் தேதி மறைந்தார். திரையுலகில் பல சாதனைகளை படைத்த ப.நீலகண்டனின் 100வது பிறந்த நாள் இன்று.