ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கியுள்ள படம் அய்யனார் வீதி. நாகரீக மோகத்தினால் பாரம்பரிய கலாச்சாரத்தை இழந்து கொண்டிருந்தபோதும், அன்பு, பாசம், குடும்ப உறவு சம்பந்தப்பட்ட கலாச்சாரங்கள் கிராமங்களில் இன்னமும் அழுத்தமாக உள்ளது என்பதை சொல்லும் படம்தான் அய்யனார் வீதி. இந்த படத்தில் சாட்டை யுவன் நாயகனாக நடிக்க, சாரா ஷெட்டி, சிஞ்சுமோகன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இவர்களுடன் எட்டு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதுபற்றி டைரக்டர் ஜிப்ஸி ராஜ்குமார் கூறுகையில், இந்த படத்தில் கே.பாக்யராஜ், பொன்வண்ணன் ஆகிய இருவரும் கதையின் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த வகையில், இந்த இரண்டு மெகா டைரக்டர்களுடன், அஜீத் தின் ரெட் படத்தை இயக்கிய சிங்கம்புலி, அர்ஜூன் நடித்த சங்கர் குரு படத்தை இயக்கிய ராஜா, டைரக்டர் வின்சென்ட் ராய், முக்கூடல் என்ற படத்தின் டைரக்டர் சுதீஷ் கண்ணன், பச்சைக்கிளி பட டைரக்டர் செல்வம் இவர்களுடன் நானும் நடித்திருக்கிறேன்.
இப்படி எட்டு டைரக்டர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே திட்டமிடவில்லை. இது தற்செயலாக நடந்துள்ளது. இப்படி பல திறமையான டைரக்டர்கள் நடித்திருப்பது இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்கிறார் ஜிப்ஸி ராஜ்குமார்.