ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சலி சினிமாவில் பெரிய நடிகையாவதற்கு அவரது சித்தி பாரதிதேவியும் ஒருவகையில் காரணம். ஆந்திராவில் இருந்த அஞ்சலியை 2002ம் ஆண்டு சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவிற்கு தேவையான நடனம் உள்ளிட்ட பல விசயங்களை அவருக்கு பயிற்சி கொடுத்து கற்றது தமிழ் படத்தில் நாயகியாக அறிமுகம் செய்தார். அதையடுத்து வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அங்காடித் தெரு படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார்.
ஒருகட்டத்தில் அஞ்சலிக்கும், அவரது சித்திக்குமிடையே குடும்பச்சண்டை ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் இருந்து ஐதராபாத்தில் இருந்த தனது பெற்றோரிடம் சென்று விட்டார் அஞ்சலி. இருப்பினும், சில காலம் சித்தியுடன் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருந்த அஞ்சலி, சமீபத்தில் சென்னை வந்தபோது பகையை மறந்து சித்தி பாரதிதேவியின் வீட்டிற்கு சென்றாராம். அவரும் பழைய குடும்ப சண்டையை மனதில் கொள்ளாமல் அஞ்சலியை வரவேற்று அன்பாக பேசியதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.