ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மைனாவிற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கிய படம கும்கி. விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமான இந்த படத்தில் லட்சுமிமேனன், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர். டி.இமான் இசையமைத்திருந்தார். யானை சம்பந்தமான கதையை மையப்படுத்தி உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனால் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். இந்த பாகத்திலும் விக்ரம்பிரபுதான் நாயகனாக நடிக்கிறார்.
மேலும், முதல் பாகத்தின் க்ளைமாக்சில் கொம்பன் யானையை கும்கி யானை கொன்று விடும். பின்னர் அந்த கும்கி யானையும் இறந்து விடும். ஆனால், இந்த கும்கி-2வில், அந்த கும்கி யானை உயிரோடு இருந்த நேரத்தில் ஒரு பெண் யானையுடன் இணைந்தபோது அதற்கு பிறந்திருந்த குட்டி யானை ஒன்று பெரிதாக வளர்ந்திருக்குமாம். அந்த யானைகள் ஒன்று சேர்ந்த ப்ளாஷ்பேக் காட்சி இப்போது இடம்பெறப்போகிறதாம். அதையடுத்து அந்த பெண் யானை பெற்றெடுத்த குட்டியானை பெரிதாக வளர்ந்த பிறகு விக்ரம் பிரபுவை தேடி வருமாம். அதை அவர் பாசத்தோடு வளர்ப்பது போன்று கும்கி-2 படம் உருவாகயிருக்கிறதாம்.