ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவர்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவில் புகுந்து காஷ்மீர் மாநிலம் யூரியில் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், நேற்று அதிகாலை பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளை சர்ஜிக்கல் ஆபரேஷன் எனும் அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளை துவம்சம் செய்ததோடு, பாகிஸ்தானையும் அலற செய்தது. இதற்காக இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்ற இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சல்மானிடம், பாக்., நடிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி கருத்து கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏற்கதக்கது தான். ஆனால், பாகிஸ்தான் நடிகர்கள் கலைஞர்கள், அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல, இந்தியாவில் அவர்களை நடிக்க அனுமதித்ததே இந்திய அரசாங்கம் தான்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கனே பாகிஸ்தான் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்டிராவில் நவநிர்மான் சேனா, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாது ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் பாக்., நடிகர் பவாத் கானின் காட்சியை நீக்க மறுத்த இயக்குநர் கரண் ஜோகருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடந்தன. அப்போது சல்மான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கேட்டு கொண்டதோடு, பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.