14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
குணசித்ர நடிகர் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தை சிவரமேஷ்குமார் தயாரிக்கிறார். தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ரேஷ்மா ரத்தோர் ஹீரோயினாக நடிக்கிறார். ‛ஆடுகளம்' நரேன், கருணா, யோக் ஜேப்பி, உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். மகன் நடிப்பது பற்றி தம்பி ராமய்யா கூறியதாவது:
நான் சினிமாவுக்கு வந்தது இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான், ஆனால் சூழ்நிலை என்னை நடிகனாக்கிவிட்டது. என்னால் செய்ய முடியாததை என் மகன் செய்ய வேண்டும் என்று விரும்பி. அவனை பெரிய இசை அமைப்பாளராக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவன் நடிகராகும் ஆசையில் இருந்தான். இது எனக்கு பிடிக்காவிட்டாலும் என்கரேஜும் பண்ணவில்லை, டிஷ்கரேஜும் பண்ணவில்லை. அவனாகவே நடிப்பு கற்று, நடனம் கற்று, சண்டை கற்று, அவனாகவே வாய்ப்பு தேடி அலைந்து இந்தப் படத்தில் நடிக்கிறான்.
நான் சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகிவிட்டது. இதுவரை நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை. என் திறமையை மதித்து வந்தவற்றை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். அதுபோல என் மகனுக்காகவும் யாரிடமும் வாய்ப்பு கேட்டு யார் வீட்டு வாசல் முன்பும் நிற்க மாட்டேன். இதை என் மகனிடமே சொல்லிவிட்டேன். அவனும் அதை ஏற்று சொந்த காலில் நிற்கிறான். இந்தப் படம் ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட் என்பதற்காக இமானிடம் சொல்லி இசை அமைக்க சொன்னேன். அது ஒன்றுதான் மகனுக்காக செய்தது. மற்றபடி நான் ஷூட்டிங் பார்க்க கூட சென்றதில்லை.
நல்ல கதை, இளைஞர்கள் நன்றாக உழைத்திருக்கிறார்கள். என் மகனை நம்பி தயரிப்பாளர் 4 கோடி செலவு செய்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நல்லபடியாக ஜெயிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனது வைக்க வேண்டும் என்கிறார் தம்பி ராமய்யா.