ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர். பார்த்திபன் கடைசியாய் இயக்கியது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை. இந்தப்படத்தை இயக்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.ஒரு சில படங்களில் தற்போது நடித்து வரும் பார்த்திபன் மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது. கிரவுட் ஃபண்டிங் முறையில் பலரது முதலீட்டுடன் பார்த்திபன் தயாரிக்கும் இந்தப்படத்தில் அவர் ஹீரோ இல்லை. அவரது குருநாதரான பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார்!
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இவர். மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட பார்வதி நாயர் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் மலையாளப் பெண்ணாகவே நடிக்கிறார். இதற்காகத்தான் பார்வதி நாயரை தேர்வு செய்தாராம் பார்த்திபன். சாந்தனு அண்மையில் திருமணம் செய்த கீர்த்தி மலையாளப் பெண்தான். நிஜ வாழ்க்கை ஜோடியைப்போலவே தற்போது படத்திலும் சாந்தனுவுக்கு மலையாளப்பெண் ஜோடியாகி இருக்கிறார். என்னே ஒரு ஒற்றுமை?