ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமா பாடலாசிரியர் அண்ணாமலை, மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த, கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 50. பச்சையப்பன் கல்லுாரியில் தமிழ் பயின்றவர், படிக்கும் காலத்திலேயே, சினிமா கனவுகளோடு தன்னை தயார்படுத்தியவர். அப்போதே, தொலைக்காட்சி தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார். பின், பத்திரிகையாளராக, பல ஆண்டுகள் பணியாற்றினார். கும்மாளம் படத்தில், பாடலாசிரியராக அறிமுகமானார். வேட்டைக்காரன், வேலாயுதம், சகுனி, உத்தமபுத்திரன் உட்பட, 50 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியவர் அண்ணாமலை. என் உச்சி மண்டையிலே கிர்றுங்குது... போன்ற பிரபலமான பாடல்கள், இவரது எண்ணங்களில் உதித்தவை.
இயற்கையானது அல்ல : சினிமா இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியோடு நெருக்கமாக இருந்தவர். அவர் நடித்து, இசையமைக்கும் படங்கள் அனைத்திலும் பாடல்கள் எழுதினார்.குறுகிய காலத்தில், 50 படங்களுக்கு மேல் பாடல் எழுதிய அண்ணாமலையின் வாழ்க்கையும் மிகக் குறுகிய காலத்துக்குள் முடிந்தது. இதற்கிடையில், அவரது மரணம் இயற்கையானது அல்ல; சந்தேகத்துக்கு உரியது என, அவரது உறவினர்கள் சர்ச்சை கிளப்பி உள்ளனர்.
அண்ணாமலை உறவினர்கள் கூறியதாவது: சமீபத்தில் தான், சென்னை சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு, அண்ணாமலை குடி வந்தார். திருமணமாகி, 14 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகள், மவுனாவின் படிப்புக்காக, அந்தப் பகுதியில் குடியேறினார். நேற்று முன்தினம் காலை, 8:40 மணிக்கு, கடைசியாக, தன் நண்பர் ஒருவரிடம், மொபைல் போனில் பேசியுள்ளார். அதன் பின், அவர் போனை எடுக்கவில்லை. ஆக, அப்போதே, அவர் இறந்திருக்க வேண்டும்; அல்லது சுய நினைவு இழந்திருக்க வேண்டும். ஆனால், மாலை, 4:00 மணிக்கு மேல், வீட்டுக்கு வந்த அவர் மனைவி, வீட்டில் அண்ணாமலை மயங்கிக் கிடப்பதை பார்த்து, பதறிப் போய், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறுகின்றனர். பல மணி நேரம் தனியார் மருத்துவமனையில், அண்ணாமலையை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர்.
அதன் பின், உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து உள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள், அண்ணாமலை தலையில் பலத்த அடிபட்டுள்ளது; இது, சந்தேகத்துக்குரியதாக உள்ளதால், கட்டாயம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, கூறியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்குப் பின், பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே, குடும்பத்தில், அண்ணாமலைக்கு பிரச்னைகள் இருந்தது. அந்த கோணத்தில், போலீசார் விசாரித்தால், மரணத்தின் பின்னணி வெளிப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.