மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கும் அவலங்களுக்கு கண்டனம் தெரிவித்து வரும் இந்து மக்கள் கட்சி, மீண்டும் நயன்தாராவை குறி வைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. கன்னட நடிகர் தர்ஷன் குடும்பப் பிரச்சினைக்கு காரணம் என்று கூறி நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க அங்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நயன்தாராவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகை நிகிதாவுக்கு அங்கு உள்ள தயாரிப்பாளர் சங்கம் 3 வருடம் நடிக்க தடை விதித்துள்ளது. இந்த முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. இதுபோன்ற தண்டனைகள் நடிகர், நடிகைகள் வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தும். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்தை பின்பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிரபுதேவா வாழ்க்கையில் நடிகை நயன்தாரா குறுக்கிட்டார். இதனால் ரம்லத் வாழ்க்கையை இழந்தார். நயன்தாராவுக்கும் இதுபோல் தடை விதித்து இருக்கவேண்டும். ஆனால் இங்கு அதை செய்ய தவறி விட்டனர். எனவே கன்னட தயாரிப்பாளர் சங்கத்தின் தடை நடவடிக்கைகளை தமிழகத்திலும் அமல்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.