கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
திரையுலகில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வியாபார ரீதியாக மட்டுமே எடுக்கப்படுகின்றன. எப்போதோ ஒரு முறைதான் நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வியாபாரம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் படம் எடுப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை எடுக்க தனி மன தைரியம் வேண்டும். விருதுகளுக்காக எடுக்கப்படும் படங்கள் கூட வியாபாரத்திலும் வசூலிலும் வரவேற்பு பெற்றால் மட்டுமே அந்தப் படத்தை எடுத்தவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியும்.
கடந்த வாரம் வெளிவந்த 'தொடரி, ஆண்டவன் கட்டளை' ஆகிய இரண்டு படங்களுக்குள் தற்போது வசூலா, பெயரா என்ற போட்டி நடந்து வருகிறது. 'தொடரி' படம் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன. ஆனாலும், பி அன்ட் சி ரசிகர்களிடத்தில் அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்று ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறதாம். கடந்த நான்கு நாட்களில் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு இந்தப் படம் வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும், தனுஷ் நடித்துள்ளதால் அவருக்கான முதல் வார இறுதி வசூல் நன்றாகவே இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த வாரம் விடுமுறை வாரம் என்பதால் இந்த வாரத்திற்குள்ளாகவே படத்தின் வசூல் திருப்திகரமாகவே இருக்குமாம்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'ஆண்டவன் கட்டளை' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் வசூல் குறைவாகவே இருக்கிறது என்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இந்தப் படம் பற்றிய பாசிட்டிவ்வான கருத்துகள் பரவி வருவதால் படம் பற்றிய பேச்சு பரவலாகி அது படத்தின் வசூலை அதிகரிக்கும் என்கிறார்கள். அக்டோபர் 7ம் தேதிதான் அடுத்த பெரிய படங்கள் வெளிவர உள்ளன. அதுவரை 'தொடரி, ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் தியேட்டரில் தொடர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால், இரண்டு படங்களின் வசூலுமே சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லையாம்.
ஏ, பி, சி சென்டர் படமோ, மல்டிபிளக்ஸ் படமோ, நல்ல படமோ பணம் போட்ட தயாரிப்பாளருக்கும், வாங்கிய வினியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட தியேட்டர்காரர்களுக்கும் ஏன் கேண்டீனில் அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களுக்கும் சேர்த்து வருமானம் தரும் படங்களே வசூல் படங்கள்.