ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஸ்ரீ சாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல், விஜய் சங்கர் இணைந்து தயாரிக்கும் படம் அய்யனார் வீதி. சாட்டை யுவன் ஹீரோவாக நடிக்க சாரா ரெட்டி, சிஞ்சுமோகன் ஹீரோயினாக நடித்துள்ளனர். பாஸ்கரன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி ராஜ்குமார். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலில் படத்தின் தலைப்பையட்டி 108 அய்யனார்களின் பெயர்கள் கொண்ட ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது:
உலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோகம் அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வதுதான் 'அய்யனார் வீதி' கதை.
கதையே கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
ஊரைக் காக்கும் அய்யனார் சாமியை பற்றிய பாடலில் தமிழ்நாட்டில் உள்ள 108 அய்யனார்களின் பெயர்கள் இடம்பெறுகிறது. இது அய்யனார் பக்தி பாடல்களின் உச்சமாக இருக்கும். பாடலுக்காக நாங்களும் விதவிதமான அய்யனார் கோவில்களை படம்பிடித்து சேர்த்துள்ளோம். இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். 65 நாட்களில் திட்டமிட்டு முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம். என்றார் இயக்குனர் ராஜ்குமார்.