ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி யின் வாழ்க்கையை மையமாக கொண்டு எம்.எஸ். தோனி தி அன் டோல்டு ஸ்டோரி என்ற பெயரில் ஒரு இந்திப் படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. நீரஜ் பாண்டே இயக்கி உள்ள இந்தப் படத்தில் சுகந்த் சிங் தோனி யாக நடித்துள்ளார். அனுபம் கேர், பூமிகா சாவ்லா, கிரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் தமிழிலும் வெளிவருவதையொட்டி அதன் புரமோசனுக்காக சென்னை வந்த தோனி, சத்யம் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு எனக்கு பிடித்த மாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன். இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது.
விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி. பள்ளி எனக்கு இரண்டாவது வீடு. வீடு எனக்கு இரண்டாவது மைதானம். நான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத் தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும் . நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன். இவ்வாறு தோனி பேசினார்.
நிகழ்ச்சியில் சூர்யாவின் மகளும், மகனும் கலந்து கொண்டு தோனி யிடம் கேள்வி கேட்டனர் அவர்கள் கேள்விக்கும், ரசிகர்களின் கேள்விக்கும் தோனி பதிலளித்தார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தோனி யுடன் நடிகர் சுகந்த் சிங், இயக்குனர் நீரஜ் பாண்டேவும் கலந்து கொண்டனர். விழாவை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.