ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மினிமம் கியாரண்டி ஹீரோவாக விஜய் சேதுபதி மாறியிருப்பதால் அவருடன் நடிக்க எல்லா நடிகைகளுமே முன்வருகிறார்கள். நயன்தாராவில் தொடங்கி தமன்னா வரை எல்லோரும் வருகிறார்கள். அடுத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
ரேணிகுண்டா, வயது 18 படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்சேதுபதிதான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். லிங்குசாமியின் உதவியாளராக இருந்த பன்னீர் செல்வம். ரேணிகுண்டா என்ற வெற்றிப் படத்தையும், வயது 18 என்ற தோல்வி படத்தையும் கொடுத்தவர். தற்போது அவர் விஜய் சேதுபதியிடம் கூறியிருக்கும் கதை ஒரு சோஷியல் திரில்லர் கதை. கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விடவே ஓகே சொல்லியிருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதி, கே.வி.ஆனந்தின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் தனுசுடன் நடிக்கிறார். அதன் பிறகே பன்னீர் செல்வம் படத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.