ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கும் தனது 57வது படத்தில் நடித்து வருகிறார் அஜீத். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு மேலாக ஐரோப்பாவில் நடைபெற்று வந்தது. சேஸிங், பைட் மற்றும் சில ரொமான்ஸ் காட்சிகளை அங்கு படமாக்கிய இயக்குனர் சிவா, அடுத்தகட்டமாக ஐதராபாத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடத்த பிரமாண்ட செட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அஜித் படங்களைப்பொறுத்தவரை அவர் சொல்லும் நாட்களில்தான் படம் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலும் முடிவெடுப்பார்கள். அந்த வகையில், இந்த 57வது படத்தின் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து இதுவரை அஜித் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. ஆனால், அப்பட யூனிட் உள்ள சிலர், அஜித் நடித்த சில காட்சிகளை செல்போனில் படமெடுத்து அதை தங்களது பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார்களாம். அந்த போட்டோக்கள் இப்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இது அஜித்தின் கவனத்துக்கு சென்றபோது கடும் கோபமாகி விட்டாராம். அதையடுத்து, தமிழ்நாடு மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் படமாக்கினால் படம் சம்பந்தப்பட்ட விசயங்கள் கசிந்து விடும் என்றுதான் வெளிநாட்டிற்கு சென்றோம். அப்போதும் நமக்கு தெரியாமல் போட்டோக்கள் வெளியாகி விட்டதே என்று டைரக்டர் சிவாவிடம் கூறிய அஜித், இனிமேல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒரு சிறிய குண்டுமணி அளவு விசயம்கூட வெளியில் கசியக்கூடாது என்று பலத்த செக்யூரிட்டி போடுமாறு கூறியுள்ளாராம்.