பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
“நான் சென்னைப் பையன், சென்னையில்தான் பிறந்து 20 வருடங்கள் வளர்ந்தேன், பிறந்த ஊரில் ஜெயிப்பதுதான் 'கிக்” என தமிழில் பேசி அசத்திய அல்லு அர்ஜுன்தான் தமிழ், தெலுங்குத் திரையுலகில் நேற்று 'ஹாட் டாபிக்' ஆக டிரென்டிங்கில் இருந்தார். தெலுங்கில் நல்ல மார்க்கெட்டுடன் கேரளாவிலும் நல்ல வரவேற்புடன் இருக்கம் அவர் ஏன் தமிழ்ப்பட அறிமுகத்தை நேற்று திடீரென அறிவித்தார் என தெலுங்குத் திரையுலகில் ஆச்சரியப்பட்டுப் போய் இருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகில் இளம் ஹீரோக்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. சிரஞ்சீவி குடும்பத்திற்குள்ளேயே பல ஹீரோக்கள் இருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரை கிருஷ்ணா குடும்பம், சிரஞ்சீவி குடும்பம், நாகார்ஜுனா குடும்பம், பாலகிருஷ்ணா குடும்பம், மோகன் பாபு குடும்பம் என பல குடும்பத்தினர் அவர்களது வாரிசுகள் என பலரது ஆதிக்கம் இருக்கிறது. சில குடும்பங்களுக்குள்ளேயே பகையும் இருக்கிறது, நெருக்கமும் இருக்கிறது.
இளம் ஹீரோக்களில் தற்போது பவன் கல்யாண், மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா என ஒவ்வொருவருக்கம் இடையே கடும் போட்டி இருக்கிறது. அவர்களது ரசிகர்களுக்குள் அடிதடி நடந்து அவை மரணம் வரை கூடச் சென்றிருக்கின்றன.
ஜுனியர் என்டிஆர் நடித்த 'ஜனதா கேரேஜ்' படம் மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது மற்ற ஹீரோக்களை கலக்கமடைய வைத்துள்ளது. ஜுனியர் என்டிஆரை தன்னுடைய கடும் போட்டியாளராக நினைப்பவர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லப்பட்டது. ஆனால், கதை சரியில்லை எனக் கூறி அதன் பின் அந்தப் படத்தை நிராகரித்துவிட்டார் அல்லு அர்ஜுன். சமீபத்தில் ஜுனியர் என்டிஆரைச் சந்தித்து அதே கதையைச் சொன்னாராம் லிங்குசாமி. அந்தக் கதையில் நடிக்க ஜுனியர் என்டிஆர் ஆர்வம் காட்டியுள்ளார். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட அல்லு அர்ஜுன் உடனே லிங்குசாமியை அழைத்து நாமே படம் பண்ணலாம் எனக் கூறியுள்ளார்.
அதனால்தான் நேற்று முன்தினம் வரை இது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. நேற்றைய அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு கூட ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் சூர்யா படத்திற்காகத்தான் இருக்கும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அது அல்லு அர்ஜுன் படம் பற்றிய அறிவிப்பு என்பது தெரிந்ததும் பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப் போகும் படத்திற்கு நேற்றே என் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் என்பது இப்போதுதான் அனைவருக்கும் புரிந்திருக்கிறது.