ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மைனா' படத்திற்கு முன்பாக இயக்குனர் பிரபு சாலமன் நான்கைந்து படங்களை இயக்கியிருந்தாலும் 'மைனா' படத்தின் கதை, அதை அவர் அணுகிய விதம், படமான மலைப் பகுதி, கதாபாத்திரங்கள், நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் அற்புதமாக அமைந்து அவருக்கும் ஒரு பெரிய பெயரைக் கொடுத்து படத்தையும் மாபெரும் வெற்றி பெற வைத்தது. அதற்கடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'கும்கி' படமும் 'மைனா'வின் அத்தனை அம்சங்களும் ஏறக்குறைய அப்படியே இருந்ததால் அந்தப் படமும் பெரிய வெற்றி பெற்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' படம் ஒரு பயணக் கதையாக அமைந்ததாலும், நெகிழ வைக்கும் உணர்புவூர்மான விஷயங்கள் ஒரு காதல் படத்தில் இல்லாததாலும் தோல்வியைத் தழுவியது. அதற்கடுத்து தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிக்க 'தொடரி' படத்தை தன்னுடைய முந்தைய மூன்று படங்களைக் காட்டிலும் அதிக உழைப்பைக் கொடுத்து உருவாக்கினார். தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் அவரது படத்திற்குக் கிடைத்தும் நேற்று வெளியான 'தொடரி' படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் இல்லை என்கிறார்கள்.
காலை காட்சி பார்த்த ரசிகர்களும் படத்தைப் பற்றிப் பாராட்டியதை விட குறை சொன்னதுதான் அதிகமாக இருக்கிறது. படத்தின் மையமான காதலையும், டிரெயின் 150 கிலோ மீட்டருக்கும் மேல் டிரைவர் இல்லாமல் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கும் போது நகைச்சுவைக் காட்சிகளும், டிரெயினின் ஒரு பெட்டி தீப்பிடித்துக் கொண்ட போதும் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தனுஷும், கீர்த்தி சுரேஷும் டூயட் பாடுவது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து அந்தக் காட்சிகளை படத்திலும் வலிய திணித்திருக்கிறார். இவையெல்லாம் படத்தின் வேகத்திற்கு வேகத் தடைகளாக இருக்கிறது என்கிறார்கள். சம்பந்தமில்லாத அந்தக் காட்சிகளை உடனடியாக நீக்கினால் அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக 'தொடரி' இருக்கும் என்கிறார்கள்.
இரண்டே முக்கால் மணி நேரப் படத்தில் அரை மணி நேரத்தைத் தூக்கினால் 'தொடரி' தன் வெற்றிப் பயணத்தை தொடர வாய்ப்புகள் அதிகம் என்பலது பலரது கருத்தாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தனுஷ் படத்திற்கான முதல் நாள் வசூல் மிக மிகக் குறைவாக இருந்துள்ளதாம்.