பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சேது, தில், காசி, தூள் படங்களுக்குப்பிறகு விக்ரம் நடித்த இன்னொரு இரண்டெழுத்து சூப்பர் ஹிட் படம் சாமி. ஹரி இயக்கிய இந்த படத்தில் விக்ரம் நடித்த ஆறுச்சாமி என்ற போலீஸ் வேடம் அவரது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது. ஆனபோதும் அதன்பிறகு அவர் ஹரி இயக்கத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், விக்ரமின் இருமுகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் ஹரி, சிங்கம்-3 படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் சாமி-2 படத்தை தான் இயக்கப்போவதாக மேடையில் பேசியபோது தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது சூர்யா நடிப்பில் எஸ்-3 படத்தை இயக்கி வரும் அவர், அந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கும்போதே சாமி-2 படப்பிடிப்பை தொடங்கப்போகிறார். அதனால் தற்போது எஸ்-3 பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே சாமி-2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடுக்கி விட்டுள்ளார் ஹரி. மேலும், ஒரு படத்தை இயக்கி முடித்ததும் அடுத்த படத்திற்காக 6 மாதங்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டி ருந்த ஹரி, எஸ்-3 படத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக சூர்யாவுக்காக காத்திருந்ததால், அந்த பட வேலைகளை முடித்த உடனே சாமி-2 படப்பிடிப்பை தொடங்குகிறாராம்.