ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விடாயுதம் படத்தில் நாயகனாக நடித்தவர் வெற்றி. ஸ்டாபெர்ரி, எனக்குள் ஒருவன் போன்ற படங்களில் கேரக்டர் ரோலில் நடித்துள்ள அவர் தற்போது வேல்முருகன் இயக்கும் தங்கரதம் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார் வெற்றி. இதில் அவரது நண்பனாக நடிப்பவர் ராண்டில்யா. இவர் வன்மம், மையம், நையப்புடை வெள்ளிக்கிழமை 13-ந்தேதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். முந்தைய படங்களில் ரவுடி வேடங்களில் நடித்த அவர், இந்த படத்தில் நண்பனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சமீபத்தில் நடந்தது. அப்போது, ஒரு காட்சியில் ராண்டில்யா லாரி ஓட்டுவது போன்று போக்குவரத்து மிகுந்த சாலையில் படமாக்கப்பட்டதாம். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச்சென்று லாரி, அவரது கண்ட்ரோலை மீறி பள்ளத்துக்குள் பாய்ந்து விட்ட தாம். இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் ராண்டில்யா.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தில் நாயகன் வெற்றிதான் லாரி டிரைவர் என்றாலும் அவரது உதவியாளராக லாரியில் செல்லும் நானும் சில காட்சிகளில் லாரி ஓட்டுவது போன்று படமாக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் மட்டுமே லாரி ஓட்டி பழகிய எனக்கு போதுமான பயிற்சி இல்லை. அதேசமயம் லாரி பெரிய வாகனம் என்பதால் நான் கவனமாக ஓட்டிச்சென்றபோதும் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்துக்குள் பாய்ந்து விட்டது. ஏதோ பெரிய விபத்து நடந்து விடும் சூழ்நிலைதான் என்றாலும், ஆண்டவன் அருளால் சிறிய காயத்துடன் அந்த விபத்தில் இருந்து தப்பினேன் என்கிறார் ராண்டில்யா.