ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நல்ல நல்ல திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்து விடுவதற்குப் பெரிய மனம் வேண்டும். அப்படி ஒரு விஷயத்தை இன்றைய திரையுலகில் செய்பவர்களில் முதன்மையாக இருப்பவர்களில் தனுஷ் குறிப்பிடப்பட வேண்டியவர். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் புதிதாக வருபவர்களை வரவேற்பதில் சீனியர்களுக்கு எப்போதும் ஒரு தயக்கம் இருக்கும்.
ஆனால், அதையெல்லாம் மீறி டிவி பக்கம் இருந்து வந்த சிவகார்த்திகேயனை தான் தயாரிக்கும் படத்திலேயே நாயகனாக உயர்த்தி அவருக்கு தனி அந்தஸ்தை உருவாக்கிக் கொடுத்தவர் தனுஷ். அதன் பின் இருவருக்கும் என்ன நடந்ததோ, 'முடிஞ்சா இவன புடி' பட இசை வெளியீட்டின் போது கூட அருகருகில் அமர்ந்தும் கூட தனுஷும், சிவகார்த்திகேயனும் முகத்தை வேறு வேறு திசையில் திருப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்ததை இந்த உலகம் அறியும். அதற்கு முன்பே பத்திரிகையாளர்களைச் சந்தித்த தனுஷ், சிவகார்த்திகேயன் வளர்ந்துவிட்டார், அவருக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு எனது நிறுவனம் பெரிய நிறுவனம் அல்ல என்று சொன்னார்.
இப்போது அதே வரிகளை கொஞ்சம் மாற்றி அனிருத்துக்காக அதைச் சொல்லியிருக்கிறார். 'பீப் சாங்' பிரச்சனையினால் தனுஷ், அனிருத்தை விட்டு விலகினார் என்றும், சிம்புவும், அனிருத்தும் நெருங்கிய நட்புடன் பழக ஆரம்பித்தது தனுஷுக்குப் பிடிக்கவில்லை என்றும் சொன்னார்கள். அதற்கேற்றால் போல் அதன் பின் தனுஷ் தயாரித்த படங்களில் இளையராஜாவும், சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளார்கள்.
தற்போது தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்திலும் ஷான் ரோல்டன்தான் இசையமைப்பாளரக தன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். தான் படம் இயக்க முடிவு செய்த உடனே அதற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டனைத்தான் நினைத்தேன் என தனுஷ் சொல்லியிருக்கிறார்.
தனுஷும், அனிருத்தும் உறவினர்கள் என்ற நெருக்கத்தையும் தாண்டி இருவருக்குள்ளும் வேறு ஏதோ ஒரு பிரச்சனை அவர்களைப் பிரித்து வைக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ஆக, தனுஷிடமிருந்து விலகிய முதல் விக்கெட்டாக சிவகார்த்திகேயன் இருக்க, இரண்டாவது விக்கெட்டாக அனிருத்தும் சேர்ந்திருப்பது கோலிவுட்டில் ஆச்சரிய, அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.