ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வயதாகிவிட்டது, எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது இனி நான் பாடப்போவது இல்லை என்று அறிவித்துள்ளார் தேன் குரலுக்கு சொந்தக்காரரான பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. 1957-ல் "விதியின் விளையாட்டு" படத்தில் தன் முதல் குரலை பதிவு செய்தவர் பாடகி எஸ்.ஜானகி. ஆனால் அந்தப்படம் வெளியாகமல் நின்றுபோனது. அதற்கு அடுத்து தெலுங்கில் எம்.எல்.ஏ., என்ற படத்தில் பாடினார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத் தொடங்கினார். மழலை கொஞ்சும் அவரது குரலின் இனிமையும், சிணுங்கும் அவரது ஹம்மிங் இன்றும் அவரது குரலில் ஒலித்து கொண்டு இருக்கிறது. இதுவரை சுமார் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் என்றாலும் அதிலும், மச்சான பாத்திங்களா...(அன்னக்களி), தூக்கம் உன் கண்களை...(ஆலயமணி), செந்தூரப்பூவே...(16 வயதினிலே), ஆயிரம் தாமரை மொட்டுகளே... (அலைகள் ஒய்வதில்லை), நான் ஆளான... (இது நம்ம ஆளு), ஒரு கிளி உருகுது (ஆனந்த கும்மி), கட்டி வச்சுக்கோ (என் ஜீவன் பாடுது), பேரைச் சொல்லவா (குரு), நேத்து ராத்திரி (சகலகலா வல்லவன்), இஞ்சி இடுப்பழகா (தேவர்மகன்), காதல் கடிதம் தீட்டவே (ஜோடி) உள்ளிட்ட பாடல்கள் பிரபலம்.
இந்நிலையில் இனி தான் பாடப்போவது கிடையாது என்று ஜானகி அறிவித்துள்ளார். தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் ஒரு தாலாட்டு பாடல் பாடியிருக்கிறார். இது தான் அவரின் கடைசிப்பாட்டு என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி ஜானகி கூறியிருப்பதாவது... ‛‛நான் பல மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை பாடிவிட்டேன். எனக்கு வயதாகிவிட்டது, இனி பாடுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் மட்டுமல்ல மேடை நிகழ்ச்சிகளில் கூட இனி நான் பாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
1938-ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர் எஸ்.ஜானகி. தற்போது இவருக்கு 78 வயதாகிறது.
2014-ம் ஆண்டு தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷூடன் ‛‛அம்மா அம்மா... பாடல் பாடியிருந்தார். இந்த பாடல் அவ்வளவு உருக்கமாக இருந்தது. இந்த வயதிலும் இவரால் இப்படி பாட முடிகிறதே என்ன அனைவரையும் ஆச்சர்யம் கொள்ள வைத்தது. சமீபத்தில் கூட ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் ‛‛தந்தையும் யாரோ.. என்ற பாடலை பாடினார். இது தான் கடைசியாக ஜானகி தமிழில் பாடிய பாடல் ஆகும்.
எப்போதும் நான் ரசிகர்களுக்காக பாடிகிட்டே இருக்கணும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் என்று சொன்ன தேன் குரலுக்கு சொந்தக்காரான ஜானகி, இனி பாட மாட்டேன் என்று அறிவித்திருப்பது ரசிர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.