ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, எப்போதும் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வார். வாரத்திற்கு ஒருதடவையாவது சர்ச்சையில் சிக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கமே வராது. இருந்தாலும் அவ்வப்போது சிலருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவிப்பார். சமீபத்தில், நடிகை கத்ரீனா கைப்பிற்கு, நடிகை ஸ்மிதா பாட்டில் விருது வழங்கப்பட்டது. முன்னதாக இவருக்கு விருது வழங்க பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஸ்மிதா பாட்டில் அளவுக்கு கத்ரீனா என்ன சாதித்துவிட்டார் என்பது மாதிரியான கேள்விகள் எல்லாம் எழுந்தன. இந்நிலையில், நடிகை கத்ரீனா கைப்பிற்கு ராம் கோபால் வர்மா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛கத்ரீனாவிற்கு ஸ்மிதா பாட்டில் விருது வழங்கியதை பலரும் விமர்சிக்கிறார்கள். ஸ்மிதா பாட்டில் எல்லாம் இருந்து உயர்ந்தவர், ஆனால் கத்ரீனா எந்தவொரு சினிமா பின்புலமும் இன்றி உயர்ந்தவர் கத்ரீனா. ஸ்மிதா, ஆரம்பத்திலேயே நாடகங்களில் நடித்த அனுபவம், குரல்வளம் பயிற்சி எல்லாம் எடுத்து வந்து சினிமாவில் முன்னேறினார். கத்ரீனாவோ அப்படியல்ல, தன் சொந்த முயற்சியால் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் உயர்ந்து இந்த சாதனையை எட்டி பிடித்திருக்கிறார். 98.5 சதவீதம் பேர் கத்ரீனா மீதுள்ள பொறாமையிலும், மீதமுள்ள 1.5 சதவீதம் பேர் அவரைப்பற்றி தெரியாமலேயே குறை கூறுகின்றனர்'' என்று கூறியுள்ளார்.