ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரியதர்ஷன். தமிழில், சின்னமணிக்குயிலே, கோபுரவாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம் ஆகிய படங்களை இயக்கியவர், தற்போது சில சமயங்களில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரியதர்ஷனிடத்தில் உதவியாளராக பணியாற்றி பின்னர் இயக்குனரான ஏ.எல்.விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். அதோடு, மலையாள டைரக்டரான பிரியதர்ஷனுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவரது மொழிபெயர்ப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார் ஏ.எல்.விஜய்.
இதுபற்றி ஏ.எல்.விஜய் கூறுகையில், பிரியதர்ஷன் சாரிடத்தில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றது நான் செய்த பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவரிடம் ஒரு நல்ல படத்தை எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்ட நான், இப்போதுவரை கற்றுக்கொண்டிருக்கிறேன். உலக தரத்தில் படங்களை எடுப்பதில் அவர் வல்லவர். அவரது சில சமயங்களில் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். உணர்வுப்பூர்வமான ஒரு கதை என்பதால் அதை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 23 நாட்களில் இந்த படத்தை அவர் எடுத்துக்கொடுத்து விட்டார்.
மேலும் நான் டைரக்டரான பிறகு அவர் படங்களில் உதவியாளராக பணியாற்ற முடியவில்லை. ஆனால் இந்த படத்தில் அவரது வசனங்களை தமிழில் மொழி பெயர்க்கும் ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. ஆக, இந்த படத்தில் தயாரிப்பாளர், உதவி இயக்குனர் என இரண்டு பணிகளை செய்யும் பெருமை எனக்கு கிடைத்தது என்கிறார் ஏ.எல்.விஜய்.